வான்மறையின் வசனங்களில்
தேன் உரையை உணர்ந்தாயா?
உளக்கறையை நீக்குமதன்
உன்னதம் நீ அறிந்தாயா?
நபிபெருமான் காட்டித்தந்த
சுன்னாக்கள் தொகுத்தாயா?
தினம் அதைநீ கடைபிடிக்க
அட்டவணையாய் வகுத்தாயா?
பாவங்கள் செய்வோரை
பாதையிலே கண்டாலும்
பக்குவமாய் எடுத்துச்சொல்
பதறாதே ஒருநாளும்!
தீ நாக்கால் சுட்டிடாமல்
தேள் வார்த்தை கொட்டிடாமல்
தனியாக அழைத்துச்செல்
இனிதாக அவன்பிழை சொல்!
தீராமல் தொடர்ந்திங்கே
தீமைகள் செய்தாலும்
தீஞ்சுவையாய் உணர்வதற்கு
தீன் வழியை காட்டி நில்!!!