கனவுகளின் தேசத்தில்
தனியே நீளமாய் பயணிக்கின்றன
அர்த்தமற்ற அங்கலாய்புகள்!
சுவடுகள் அழிந்த
நேற்றைய பொழுதுகளுக்காய்
அழுது வடிகின்ற
நிகழ்கால வடுக்கள்!
பயங்கரமாய் ஊளையிடும்
நரிகளின் அர்த்த ராத்திரியில்
பிதுங்கி வழிகின்றன
என் அச்சங்கள்!
சாத்தான்
ஆடுகிற ஆட்டத்தில்
தாயக்கட்டைகளாய் மாறி
புரட்டிப்போடப்படுகின்றன
இறுதி மூச்சின் விசும்பல்கள்!!!