
என் தகுதிக்கு மீறிய கற்பனைகளில்
இதயத்தை
மூழ்க விடவில்லை...
கானலாகும் உலக இன்பங்களை
என் உள்ளம்
நாடவுமில்லை!
மரபென்ற வேலிக்குள்
கட்டுப்பட்டிருப்பதால்
மார்க்கத்தின் தீஞ்சுவையை
உணருகிறேன் நான்!
யாரப்பே...
நீ தந்த குரல்கொண்டு
யாரையும் நான்
ஈர்த்தெடுக்கவில்லை..
கண்ணிரண்டால் ஆணகளுடன்
காதலுடன் போர்தொடுக்கவில்லை!
திருட்டுத்தனமாய்
தொலைபேசவுமில்லை...
தீய ஆசைகளுக்கு
வலைவீசவுமில்லை!
ஈமானியக்கொடி
இதயக்கிளையெங்கும்
படர்கிறது...
உள்ளத்தின் களை தீரத்து
அது சந்தோஷத்தைத் தொடர்கிறது!
ஷைத்தானை விட்டு
நானிருக்கிறேன்
தொலைதூரம்...
யாஅல்லாஹ்...
நன்மையை மட்டுமே
எதிர்பார்க்கிறேன்
ஒவ்வொரு நாளும்!
உன் நாமம் கூறினால்
கவலைகள் கழிகிறது..
ரஹ்மானே...
வல்லாவனாம் உன்
ரஹ்மத்
என் வாழ்வெங்கும் பொழிகிறது!!!