என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Sunday, July 31, 2011

என் செய்வேன் நான்?

பேனா மைகொண்டே
சோகங்களை
கக்கிவிட நினைக்கும்
வாடிப்போன
என் இளமையே..

இளமையின் இறுமாப்பில்
சிக்கியழிந்து
சீர்கெட்ட
என் இதயமே..

இதயத்தின்
புலம்பல்களோடு
நித்தமும் கழிகின்ற
என் இரவுகளே..

உங்களுக்குத்தெரியுமா
என் சோகங்கள்?

மனிதர்களை
நான் நினைத்தேன்
நியாயத்தின் பங்காளிகளாக..
அவர்களோ நடந்தார்கள்
காசின் கூட்டாளிகளாக!

அவர்களை
நான் நினைத்தேன்
சத்தியத்தின் அறிவாளிகளாக..
அவர்களோ நடந்தார்கள்
காசு திண்ணும் பெருச்சாளிகளாக!

அவர்களை நான் நினைத்தேன்
நியாயத்தின் காப்பாளர்களாக..
அவர்களோ மாறினார்கள்
பணக்காரன்பேச்சு கேட்பவர்களாக!

தலைவலிக்கு
தைலம் தடவும்
கைகளை விடவும்..
தூர இருந்து
ஆறுதல் சொல்பவர்கள்
மகானாக தெரிகின்றார்கள்!

என்செய்வேன் நான்
இத்துன்பம் ஏன்???